Wednesday, August 21, 2013

காதல் என்னுளே வந்த நேரம் தமிழ் பாடல் வரிகள் - நேரம் (Kadhal Ennulle Vandha Neram Tamil Lyrics - Neram)

காதல் என்னுளே வந்த நேரம்

படம்: நேரம்
பாடல்: காதல் என்னுளே வந்த நேரம்
பாடியவர்: இரஞ்சித் கோவிந்த்
இசையமைப்பாளர்: இராஜேஷ் முருகேசன்


காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்
உன் முகதசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் உன்னுள்ளே
நானும் வந்தால் மெதுவாய் சரியாய் அது போகாதா

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லையென்றால் தவிப்பேன்
வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்
என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிஞ்சாலும்
உன் அன்பு வந்த பின்னே நாலும் மாறி போகும்
என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ

நேற்று அவள் இருந்தாள் - மரியான் (Netru Aval Irundhal - Mariyan)

நேற்று அவள் இருந்தாள் - மரியான்

படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சின்மயி


நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது

நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே
நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
இருந்தாய்! இருந்தோம்!

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது

இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்(Innum Konja Neram - Mariyan)

இன்னும் கொஞ்ச நேரம்

படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: கபிலன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் 


இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலயே
இப்போ என்ன விட்டுப் போகாதே என்ன விட்டுப் போகாதே
இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்

இதுவரைக்கும் தனியாக என் மனசை
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையைவிட்டு வலையைவிட்டு வளையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப் போல
வந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையலைப் போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்புக்காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்னை இழுக்க என்னை இழுக்க
என் மனசு நிறையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்னை நீ தொட்டாதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு
தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

நீ என் கண்ணு போல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்