Thursday, June 5, 2014

ஆஹா கல்யாணம் | மழையின் சாரலில் மழையின் சாரலில் (Aha Kalyanam - Mazhayin Saralil)

படம் - ஆஹா கல்யாணம்

வரிகள் - தாமரை

இசை - தரன் குமார்

குரல் - நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன்


மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது...
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா...

இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது...

Sometimes I Need Your Love
Sometimes I Need Your Hug
What Would I do Now
What Would I do Now
Sometimes I Need You
Sometimes I Feel You
What Would I do Now
What Would I do Now

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது....

யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க
நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க

கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க

வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா....

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…

விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா...

இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது




Saturday, April 26, 2014

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் தமிழ் பாடல் வரிகள் - தெகிடி (Vinmeen Vithayil Tamil Lyrics - Thegidi)

----------------------------------------------------------------------

படம் : தெகிடி
பாடல் : விண்மீன் விதையில்
பாடியவர்கள் : அப்ஹே ஜோத்புர்கர் , சைந்தவி
இசை : நிவாஸ்  K பிரசன்னா
பாடலாசிரியர் : கபிலன்
நடிகர் : அசோக் செல்வன், ஜனனி ஐயர்

----------------------------------------------------------------------

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உன்னை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடீ
முதன் பெண் தானே நீ தானே
எனக்குள் நானே ஈர்ப்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல் நானே
பேராசை கொண்டேன்
உன்னை முன்னாலே பார்க்கும்போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்பார்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போவேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு

மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்