Tuesday, May 15, 2012

அழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள் - (Azhage Azhage - Oru kal Oru kannadi Lyrics)


அழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : முகேஷ் - ஸ்ரீ மதுமிதா

அழகே அழகே அழகின் அழகே நீயடி - உன்
அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி – என்
ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
நீ தூண்டில்காரனைத் தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
பாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

அழகே அழகே ....

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்
கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்
அடிக்கடி முள்ளென தைத்தாய்
ஆயினும் பூவென பூப்பாய்
இதயக் கதவை இறக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்
இந்தக் காதல் என்பது ஒரு மழலைப் போன்றது
அது சிணுங்க சிணுங்கதான் கவனம் பிறக்கும்
உனைக் கெஞ்சிக் கேட்கிறேன்
எனைக் கொஞ்சக் கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய்
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம்வர
கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
பாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

பலப்பல கனவுகள் இருக்கு
அதை ஏன் சொல்லணும் உனக்கு
மனசுவிட்டு பேச நீயும் நண்பனா எனக்கு
பார்த்ததும் பிடித்தது உனக்கு
பழகிட தோணனும் எனக்கு
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு
நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி
என்னைக் கடந்துபோகையில் நொறுங்குது நெஞ்சம்
நீ காதல் கஜினியா பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைக்கிறாய்
உனக்கும் எனக்கும் எதுக்கு காதல் வலம்வர
கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

அழகே அழகே ....

No comments:

Post a Comment